சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்!

சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்திய இறையாண்மையை பாதுகாப்போம் என்று சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்ட கொங்கு நாடு மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஈஸ்வரன், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் இறுதியில்
“இந்த ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை உபயோகப்படுத்தவில்லை; தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது” என்று பேசினார்.

இதற்கு முதலமைச்சரும், சபாநாயகரும், காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும், பாஜகவும் மௌனம் காத்ததாகக் கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தன் சித்தாந்தத்தில் இருந்து விலகி செல்கிறதா?”, “ஈஸ்வரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்த கோரியும், அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க கோரியும் அவரை நாடு கடத்த கூறியும் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் பாலா, குடந்தை நகர தலைவர் பிரபாகரன், ‌இளைஞரணி மாவட்ட தலைவர் விஜய், திருவிடைமருதூர்
ஒன்றியத் தலைவர் ஜெயக்குமார், ஆலய பாதுகாப்பு பிரிவு வேல்முருகன், இந்து முன்னணியின் முன்னாள் நகர தலைவர் ராஜா, தஞ்சை மாவட்ட பூசாரிகள் பேரவை அமைப்பாளர் கார்த்திக், தஞ்சை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தர்மா முத்துக்கிருஷ்ணன், கார்த்தி, ஜீவா ,அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறுவர்களுக்கான நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் தங்கப்பதக்கத்தை வென்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு திருவள்ளூரை சேர்ந்த 8 வயது சிறுவன் பிரணவ் தேர்வாகியுள்ளார்.

சிறுவர்களுக்கான நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் தங்கப்பதக்கத்தை வென்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு திருவள்ளூரை சேர்ந்த 8 வயது சிறுவன் பிரணவ் தேர்வாகியுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மையத்தில் பெருந்திட்ட வளாகத்தில் நீச்சல் குளம் அமைந்துள்ளது இந்த நீச்சல் குளத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி சாரா சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
குறைந்த கட்டணத்தில் தனியாரை விட நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கும் இந்த மாவட்ட நீச்சல்குளத்தில் இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் நீச்சல் பயிற்சி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்மையில் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சர் விளையாட்டு கோப்பை நீச்சல் போட்டி நடைபெற்றது இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீச்சலடி மையங்களில் பயிற்சி பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் திருவள்ளுவர் வி.எம்  நகரைச் சேர்ந்த வினோத் என்பவரின் மகன் பிரணவ் (8) கலந்துகொண்டு மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பெற்று தேர்வாகியுள்ளார். இதில் தங்கப்பதக்கம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகளை பெற்ற மாணவன் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா கூறும்போது தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்காக பல்வேறு சீரிய திட்டங்களை தீட்டி வருகிறது இந்த திட்டங்கள் மூலம் இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.
தற்போது இந்த மாவட்ட நீச்சல் குளத்தில் குறைந்த கட்டணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர் பயிற்சியாளர் லோகேஷ் தினசரி பயிற்சி அளித்து வருகிறார் இந்த நீச்சல்குளம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை தனியார் நீச்சல் பயிற்சி மையங்களை விட இங்கு குறைந்த கட்டணத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது மேலும் இங்கிருந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மேலும் மேலும் தனது இலக்கை விரிவுபடுத்தி வரும்போது தற்காலத்தில் கல்வியில் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற முடியும் அதன் மூலம் நல்ல அரசு பணிகளிலும் சேர முடியும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் மேலும் அரசு தரப்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு நடத்தப்படுகின்றது தற்போது முதலமைச்சர் பரிசு கோப்பைக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர்பங்கேற்றனர்.
அதில் பிரணவ் என்ற சிறுவன் தங்கப்பதக்கம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளார் மேலும் நீச்சல் போட்டி என்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான போட்டி ஆகும் மேலும் அவசர காலத்தில் உயிர் காக்க உதவும் ஒரு கலையாகும் இந்த கலையை கற்பதன் மூலம் உடல் ஆரோக்கியமும் மன உறுதியும் பலம்பெறும் எனவே விளையாட்டில் ஆர்வமுள்ள அனைவரும் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.

திருவள்ளூரில் இருந்து எஸ். நாகராஜ்,

கும்பகோணத்தில் தனியார் பள்ளியை கண்டித்து கல்வி மாவட்ட அதிகாரியிடம் புகார்

மேலக்காவேரியில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவ மாணவிகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்கள். ஆண்டு தேர்வுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் சில மாணவி கருக்குபாட புத்தகங்கள் வழங்கவும் மறுத்துள்ளனர்.இதுகுறித்து கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலரிடம் (DE0) புகாரளித்தும் எந்த வித அசைவும் இல்லாத நிலையில் ,DEO அலுவலகத்துக்கு மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்.எப்.ஐ) போராட்டம் நடத்த இருந்த நிலையில் , நிலைமையை உணர்ந்த DE0 அவர்கள் உடனடியாக மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி நடவடிக்கை எடுத்தார். மேலக்காவேரியில் உள்ள சில தனியார் பள்ளிகள் கல்வி உரிமையை பறிக்கும் செயல்களில் இனி ஈடுபட்டால் பெற்றோர்கள் சார்பாக மாணவர் சங்கம் தலைமையில் கல்வி             உரிமையை பறிக்கும் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலக்காவேரி மாணவர்களுக்காக குரல் கொடுத்து நீதியை பெற்று தந்த மாணவர் சங்கத்தை பெற்றோர்கள் சார்பாக பாராட்டி வரவேற்றனர்

Design a site like this with WordPress.com
Get started